Thursday, July 19, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீ்க்கிங்-4


1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.  


நான் பார்த்த சினிமாக்கள்!

டஙகள் பார்த்தே நான் நடிக்க வந்தேனோ, என்னவோ...

அவ்வளவு படம் பார்ப்பேன். அதுவும் பார்க்க வேண்டிய நேரத்தில் இல்ல, படிக்கப் போற நேரத்தில். படிக்கிற காலத்தில் பணம் கிடைப்பது கஷ்டம்தான். ஆனா எனக்குப் படம் பார்க்காம இருப்பது அதைவிடக் கஷ்டம்!

படம் பார்ப்பதற்காகப் பொய் சொல்லவும் தயார். ஏன், திருடவும் கூடத் தயார்தான்! வீட்டில கேட்டா அனுப்ப மாட்டாங்க- அதுவும் நான் விரும்பிக் கேட்கிற படத்துக்கு. ஏதாவது ஒரு படம் நூறு நாளைத் தாண்டி ஓடினால், அதுவும் புராணப் படமாக இருந்தால் குடும்பத்தோட நாய்க்குட்டி சகிதமாய்ப் போய்ப் பார்க்கணும். ஹோ.... படா பேஜார்!

என் இஷ்டத்துக்குப் படம் பார்க்கணும்- அவ்வளவுதான்! ஆனா பணம்..? என்னா பெருசு, சேர்த்துக்க வேண்டியதுதானே..? கடை வைச்சிருந்தாங்க எங்க வீட்டிலேயே. அதுதான் எனக்கு அக்கவுண்ட் இருக்கிற பேங்க்... ஆனா, யாருக்கும் தெரியாம பணம் ‘டிரா’ பண்ணனும். அதில எல்லாம் நான் கில்லாடி! பணம் கைக்கு வந்துடும்.

நேரம்..? ஸ்கூலுக்கு ‘கட்’!

வாத்தியாருக்கு லீவ் லெட்டர்- எங்க அப்பா எழுதின மாதிரி. லெஃப்ட் ஹேண்டால அவுங்க கையெழுத்து.

ருநாள் என் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன் தியேட்டர்லே. விழுந்தது அடிகள். என் வலது முழங்கையில இப்பவும் அந்த அடிகள் தந்த தழும்பு அடையாளத்தைப் பார்க்கலாம்.

அதுக்குப் பிறகு நான் படம் பார்ப்பது பாதி பாதிதான். இப்பவும் அப்படித்தான். ஸ்டார்ட் ஆன பிறகு போறேன். முடியறதுக்கு முன்னாலேயே வந்துடுறேன். அப்ப வீட்டுக்கு லேட்டா போனா, படம் பார்த்தது தெரிஞ்சு போகும்னு பயம். இப்ப ஜனங்கள் பார்ப்பாங்கன்னு பயம்!

ரு கன்னடப் படம் பார்க்க சைக்கிளில் போய், முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போக என் சைக்கிள வந்து பார்த்தேன். சைககிள் இருக்கு - டைனமோ இல்லே. யாரோ அடிச்சிட்டுப் போயிட்டாங்க. அங்க சண்டை போடவும் நேரமில்லே. கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியல. வீட்டில டைனமோ எங்கேன்னு கேட்பாங்களேன்னு பயம். லைட் இல்லாம சந்து பொந்தெல்லாம் நுழைந்து, போலீஸை ஏமாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனா, வீட்டிலே என்ன சொல்றது..? ஒரு ஐடியா தோணிச்சு. சைக்கிளை வீட்டு வாசலுக்கு முன்னால நிக்க வைச்சேன். ஒரு கல்லை எடுத்து உள்ளே இருக்கிறவங்களுக்கு நல்லாக் கேட்கிற மாதிரி ஜோரா சைக்கிள் மேலே வீசி அடிச்சேன். ‘டக்...!’
என்னமோ ஏதோன்னு ஓடி வந்தாங்க. நான் ஓரமா மறைஞ்சிக்கிட்டேன். சைக்கிளைப் பார்த்தாங்க. டைனமோ இல்ல! அவங்களே முடிவு பண்ணிட்டாங்க- கேட்ட ‘டக்’ சத்தம் யாரோ டைனமோவை எடுத்த சத்தம்ன்னு!
பரவாயில்லை... என் மூளையும் அப்போ நல்லாவே வேலை செய்தது. ஆனா, இதுபோல எல்லொருக்கும் மூளை வேலை செய்யும்னு அப்பத் தெரியல. அந்த நிகழ்ச்சி....!
து ஒரு டூரிங் டாக்கீஸ். பேரு ‘பசவேஸ்வரா’. ‌தரை நாலணா, பெஞ்சு பன்னிரெண்டனா- Entrace Fees. இருக்கிற டெண்ட்டும் பழசு, ஓடற படங்களும் பழசு.

எனக்கு ரொம்ப செளகரியம். நாலு மாதத்துக்கு ஒரு வாட்டி கேம்ப் போடுவாங்க. அங்க வேலை செய்யறவங்கதான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலிங்கன்னு என் நினைப்பு. காரணம்... அவுங்க டெய்லி படம் பார்க்கிறாங்களே..!

நானும் எங்கப்பாவும் வீட்டுக்கு வெளியேதான் படுக்கிறது. ஒன்பது மணிக்குப் படுப்போம். பத்து மணிக்கு அப்பா குறட்டை அடிப்பாரு. பத்தே கால் மணிக்குப் படம் ஆரம்பமாகும். பத்தரை மணிக்கு நான் எழுந்திருப்பேன். மூணு தலையணை வைச்சிருப்பேன் கைவசம். மனுசன் படுத்திருக்கிற மாதிரி ‌தலையணைகளை வைச்சி பெட்ஷீட்டைப் போர்த்திட்டு - அப்பா தூங்கிட்டாங்கன்னு அறிஞ்சுக்கிட்டு - மழை வராததையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு என் கால்கள் டூரிங் டாக்கீஸ் பக்கம் பறந்து ஓடும்- இருட்டுல.

நாலணா கொடுத்துட்டு, யாருக்கும் தெரியாம இப்ப நான் தியேட்டருக்குள்ள நுழையிற மாதிரியே அப்பவும் நுழைவேன். யாராவது பார்த்திடுவாங்கன்னு பயந்து, இப்ப படம் பார்க்கிற மாதிரியே அப்பவும் படத்தைப் பார்ப்பேன். படம் முடியறதுக்கு முன்னாடியே ஓடிடுவேன். படதட்தை விட்டு ஜனங்க ரோட்டில இருக்கும் போது நான் என் படுக்கையில இருப்பேன்..!

இருட்டு! அமைதி... கலகல சப்தம். அப்பா எழுந்திடுச்சிடுவாரு. என் படுக்கைப் பக்கம் பார்ப்பாரு. தலையணை போயி சிவாஜிராவ் அங்கே இருப்பான். இப்படியே நடந்தது பல காலம். எதுக்கும் ஒரு முடிவு வேணுமே...

‘ஜெகதேகவீரனி கதா’ கிளைமேக்ஸ் படு இன்ட்ரஸ்‌டிங்! என்னை மறந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். ‘வணக்கம்’ போட்டதையும் பார்த்திட்டேன். நான் பார்த்த படங்களிலே முதல்ல ‘வணக்கம்’ பாத்து வெளில வந்தேன். லேசா மழை வந்துக்கிட்டு இருக்கு. டெண்ட்டை விட்டுப் பறந்தேன். வீட்டுக்கு வெளியே போயி விழுந்தேன்... பார்த்தேன்!

படுக்கையைக் காணோம்! எல்லாத்தையும் சுருட்டி உள்ளே கொண்டு போயிட்டாங்க- மழை வந்ததுனால. மெதுவா கதவைத் தட்டினேன். தட்டின சப்தம் எனக்கே கேட்கலை. ஆனா... உடனே கதவைத் திறந்தாங்க.

தூங்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாரும் எழுந்திருச்சி உட்கார்ந்தாங்க- அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே! அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல.
- ரஜினியின் அனுபவங்கள் நிறைவு -

No comments:

Post a Comment